Our Books
மய்யம்: தேர்ந்தெடுத்த படைப்புகள்
உலக நாயகன் கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக “மய்யம்” என்ற பத்திரிகையை 1987-ஆம் ஆண்டு தொடங்கினார். திரைப்பட ரசிகர்களின் ரசனையும் அறிவுத் தேடலும் மேம்பட வேண்டும்; மேலும் சமூக முன்னேற்றத்திற்கான சிந்தனைகளில் அவர்கள் ஈடுபட வேண்டும் என்பதே இந்த இதழின் அடிப்படை நோக்கம்.
“தேடித் தீர்ப்போம்..” என்ற அழைப்புடன் தொடங்கப்பட்ட இந்த இதழில் தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளர்களும் கலைஞர்களும் பங்களித்தனர். ரசிகர் மன்றப் பத்திரிகையாக அல்லாமல், சினிமா, கலை, இலக்கியம் மற்றும் சமூக சிந்தனைகள் குறித்து பேசும் ஒரு தரமான இடைநிலை இதழாக மய்யம் திகழ்ந்தது.
அந்த இதழ்களில் வெளியான முக்கியமான கட்டுரைகள், உரைகள், மற்றும் படைப்புகளைத் தொகுத்து “மய்யம்: தேர்ந்தெடுத்த படைப்புகள்” என்ற இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
